21.04.2020 Alphabetical Prediction


புதன் வாழ்க..!

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.
21 ஏப்ரல்2020

Daily Alphabetical Prediction of your names first letter
21, April 2020

A,I,M,Q : Greatness   பெருமை
B,H,R   : Support ஆதரவு
C,S   : Life  வாழ்வு
D,J   : Devotion   பக்தி
E,K,X  : Promotion   உயர்வு
F,G,P :  Glory புகழ்
L,Y  : Greed    பேராசை
N,T : Discretion    விவேகம்
O,Z : Illness    நோய்
U,V,W  : Affection பாசம்

Give yours Suggestions

bhudhanvazhga@gmail.com

நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்



🙏நரஸிம்ம அவதாரத்தின் சிறப்புகள்🙏

அதர்வண வேதம் ரொம்ப அழகாகச் சொல்கிறது - நரசிம்ஹ அவதாரத்தை 'எலக்ட்ரிசிடி' என்கிறது. அது ஒரு கரண்ட். வித்யுத் சக்தி. கரண்டைத் தொட்டோமானால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிடும் நம்மை! நரசிம்ஹனுக்கும் அடித்த கை பிடித்த பெருமாள் என்று பெயர்.

தன்னை அடித்த ஹிரண்யனின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டார் எம்பெருமான். மற்றொரு கையால் சிரஸை – சிகையைக் – கெட்டியாகப் பிடித்துக் கொண்டாராம்.

ஏன் அவ்வாறு கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் என்று கேட்டால், அந்தப் பிடி மூலமாகவே தன் பலத்தைக் காட்டினாராம் பரமாத்மா. ‘’இந்த முட்டாள் நம்மோடு சண்டை போடுகிறானே! இந்த ஒரு பிடியே ம்ருத்யு பிடியாக இருக்கிறதே என்று விழுந்து சரணாகதி பண்ணுகிறானா பார்ப்போம்’ என்ற எண்ணத்துடன் ஹிரண்யகசிபுவின் சிரஸைப் பிடித்தானாம். ‘சரணாகதி பண்ணினால் இவனை மன்னித்து விட்டு விடுவோம்’ என்று நினைத்தாராம்.

பகவானுக்கு எவ்வளவு காருண்யம் பாருங்கள்!

இவ்வளவு உக்கிரமாகத் தோன்றியவனுக்கே இத்தனை காருண்யம் என்றால், சாந்தமாகத் தோன்றுகிறவனிட்த்திலே எவ்வளவு காருண்யத்தை நாம் பார்க்கலாம்!

அவ்வளவு உக்கிரமாக வருகிறார் பரமாத்மா!

அவர் வரக் கூடிய வேகத்தைச் சொல்லும் போது ‘மேகம் எப்படிப் போகிறதோ அப்படி வேகமாகச் செயல் பட்டான்’ என்று வர்ணிக்கப்பட்டிருக்கிற்து.
அப்படி வேகமாகப் பாய்ந்து வந்தவன் ஹிரண்யனை ஒரு பிடி பிடித்து விட்டான்.

அப்போதாவது வழிக்கு வருகிறானா என்று பார்ப்பதற்கு. 
அப்புறம் தான் அவனை முடித்தார்.

அளந்து இட்ட தூணை அவன் தட்ட, ஆங்கே வளர்ந்திட்டு வால் உகிர்ச் சிங்க உருவாய் உளந்தொட்டு, இரணியன் ஒண்மார்வு அகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி என்கிறார் பெரியாழ்வார்.

அளந்திட்ட தூண்! அவனே – ஹிரண்யனே – அளந்து இட்ட தூணாம். அது வேறு இடத்தைச் சொன்னால், ஏற்கனவே வந்து புகுந்து கொண்டு உட்கார்ந்திருப்பான் என்று, தானே பக்கத்திலிருந்து தேர்ந்தெடுத்தானாம் தூணை. தானே கட்டிய தூணைத் தேர்ந்தெடுத்தானாம்.

எப்பேர்ப்பட்ட தூண் அது…? தங்கச் செங்கல் வைத்துக் கட்டிய தூண். அந்தத் தூணைத் தட்டியதும் தோன்றினான் நரசிம்ஹன்.

ஹிரண்யனோடு சண்டை போட்டார். பலத்தைக் காட்டினார். அப்புறம் மடியிலே படுக்க வைத்துக் கொண்டு அவனை உளந் தொட்டான்.

அதாவது ஹ்ருதயத்தையும் தொட்டுப் பார்த்தான் பரமாத்மா! இத்தனை நாள் நம்மோடு சண்டை போட்டது, நம்மை வைது(திட்டி), நம்மைத் தூற்றியதெல்லாம் ஹ்ருதயத்தளவிலா இல்லாவிட்டால் வாயளவிலா?. வாயளவிலானால் விட்டு விடுவோம். ஹ்ருதயத்தளவில் இருந்தால் அவனை முடிப்போம். அப்போதும் பரீட்சை பண்ணிப் பார்க்கிறான் பகவான்.

ஹ்ருதயத்தளவில் எதிர்ப்பு இருந்ததால்தான் ஹிரண்யனை அவன் முடித்தான்.

எத்தனை காருண்யம் அவனுக்கு!. இறுதி வரைக்கும் அவனிடத்தில் சரணாகதி பண்ண நமக்குச் சந்தர்ப்பம் தருகிறான்.

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !!!!

பெரியவா சரணம்

பெரியவா  சரணம்

        காஞ்சிபுரத்தில் சர்வ தீர்த்தம் என்ற இடத்தில் பெரியவா ஒரு சமயம் இருந்தார். கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து தரிசனம் பண்ணிக் கொண்டிருந்தனர்.

       அப்போது ஒரு ஏழை விவசாயி ஒருவர் பஸ் செலவுக்குக் கூட காசில்லாமல் பாத யாத்திரையாக நடந்தே பெரியவா தரிசிக்க வந்தார். வெறுங்கையோடு  எப்படி  பெரியவாவைப் பார்ப்பது? அதனால் எட்டணாவிற்கு இரண்டு வாழைப்பழம் வாங்கிக் கொண்டு தரிசிக்க வந்தார்.

        பெரிய பெரிய தட்டுகளில் எதை எதையோ நிரப்பி வந்து சுவாமிகளுக்கு அர்ப்பணிக்க காத்துக் கொண்டிருக்கும் பக்தர்களை பார்த்தார் விவசாயி. அவருக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. ‘இதைக் கொண்டு போய் எப்படி கொடுப்பது’ என்று தயங்கினார்.

          மேலும் நந்தனாரைப் போல தன் ஜாதியை நினைத்து வருந்தினார். அருகில் போய் தரிசனம் பண்ண முடியாதே என ஏங்கினார். ஒதுங்கி நின்றார்.

         சுவாமிகள் வெளியே வந்தார். பெருஞ்செல்வர்களை ஒதுக்கி விட்டு நேரே விவசாயிடம் வந்தார். முதல் தரிசனமே அவருக்குத் தான். இதை எதிர்பார்க்காததால் கை காலெல்லாம் அவருக்கு நடுங்கியது. பெரியவாளோ, “நீ யார்? எங்கேருந்து வரே? எப்படி வந்தே?” என்றெல்லாம் கேட்டு அறிகிறார்.

           “உனக்கு என்ன வேணுமப்பா?” என்று அன்பொழுக கேட்கிறார் ஆச்சார்யப் பெருமகன்.  “ஊரில் எனக்குக் கொஞ்சம் நிலம் இருக்கு. ஊரார் தகராறு செய்து என் நிலத்துக்கு மட்டும் தண்ணீர் விடாமல் தடுக்கிறார்கள். பயிர் பண்ண முடியல. குடும்பம் பட்டினியால் வாடுது. சாமி தான் அனுக்கிரகம் பண்ணணும்!” என்று பணிந்து நிற்கிறார் அந்த ஏழை.

             அதைக் கேட்டுக் கொண்ட பிறகு, “அது என்ன கையில்” என்று கேட்டு தன் கையால் வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டார். பிரசாதம் எடுத்து வரச் சொன்னார். பணமும் தரச் சொன்னார். “போய் வா! எல்லாம் சரியாகி விடும்” என்று ஆசி கூறி அனுப்பி வைத்தார்  கருணை  தெய்வம்  நம் பெரியவா.

20.04.2020 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
20, ஏப்ரல்2020   
Daily Alphabetical Prediction of your names first letter   
20, April 2020   
   
A,,I,M,Q   Devotion பக்தி
B,H,R    Competition. போட்டி
C,S   Glory புகழ்
D,J.   Reputation கீர்த்தி
E,K,X  Income வரவு
F,G,P Promotion    உயர்வு
L,Y  Envy பொறாமை
N,T Benefit அனுகூலம்
O,Z   Greatness மேன்மை   
U,V,W  curiosity    ஆர்வம்   


Give yours Suggestions



bhudhanvazhga@gmail.com

விஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் வரும் சில ஸ்லோகங்களின் வார்த்தைகள்.

*விஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் வரும் சில ஸ்லோகங்களின் வார்த்தைகள்...*

*முடிந்த போதெல்லாம் கூறுங்கள் நன்மை அடையுங்கள்*

*ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள்:
 ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் முழுவதும்...*👍👍👍

*படிப்பில் வல்லவனாக*
வேதோ வேதவிதவ்யங்கோ
வேதாங்கோ வேதவித் கவி

*வயிற்று வலி நீங்க*
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா
ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ

*உற்சாகம் ஏற்பட*
அதீந்த்ரியோ மஹாமாயோ
மஹோத்ஸாஹோ மஹாபல

*ஸூக்ஷ்ம புத்தி ஏற்பட*
மஹா புத்திர் மகாவீர்யோ
மகாசக்திர் மஹாத்யுதி

*கண்பார்வை தெளிவுபெற*
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா
ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்

*பெருமதிப்பு ஏற்பட*
ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர்
ஜஹ்நுர் நாராயணோநர

*எண்ணிய காரியம் நிறைவேற*
ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதன

*கல்யாணம் நடக்க*
காமஹா காமக்ருத் காந்த:
காம: காமப்ரத: ப்ரபு

*உயர்ந்த பதவி ஏற்பட*
வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந:
ஸம்ஸ்த்தாந: ஸ்தாநதோ த்ருவ

*மரண பயம் நீங்க*
வைகுண்ட: புருஷ: ப்ராண:
ப்ராணத: ப்ரணவ: ப்ருது:

*அழியாச் செல்வம் ஏற்பட*
அர்த்தோநர்த்தோ மஹாகோசோ
மஹாபோகோ மஹாதந

*நல்ல புத்தி ஏற்பட*
ஸர்வதர்சீ விமுக்தாத்மா
ஸர்வஜ்ஞோ ஜ்ஞான முத்தமம்

*சுகம் உண்டாக*
ஆநந்தோ நந்தநோ நந்த:
ஸத்யதர்மா த்ரிவிக்ரம

*க்ஷேமம் உண்டாக*
அனிவர்த்தி நிவ்ருத்தாத்மா
ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ

*துன்பங்கள் தொலைய*
பூசயோ பூஷணோ பூதிர்
விசோக: சோகநாசன

*வியாதிகள் நீங்க*
பூர்ண: பூரயிதா புண்ய:
புண்யகீர்த்தி ரநாமய

*மோக்ஷமடைய*
சத்கதி: சத்க்ருதி: ஸத்தா
ஸத்பூதி: ஸத்பராயண

*சத்ருவை ஜெயிக்க*
ஸுலப: ஸுவ்ருத: ஸித்த:
சத்ருஜிச் சத்ருதாபன

*ஆபத்து விலக*
அமூர்த்திரநகோ சிந்த்யோ
பயக்ருத் பயநாசந

*மங்களம் பெருக*
ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி
ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண

*துர்சொப்பனம் நீங்க*
உத்தாரணோ துஷ்க்ருதிஹா
புண்யோ துஸ்ஸ்வப்நநாசந

*பாபங்கள் நீங்க*
தேவகீ நந்தந: ஸ்ரஷ்டா
க்ஷிதீச: பாபநாசந: