யோகம்


3. ஆயுஷ்மான் (ஆயு):-
இது சுப யோகமாகும். பெரியவர்கள், மகான்கள், ஞானி - யோகிகள் "ஆயுஷ்மான் பவ" என்று இந்த யோகத்தின் பெயரால் வாழ்த்துவது உண்டு. "ஆயுஷ்மான் பவ" என்றால் நீடுழி பல்லாண்டு வாழ்க என்று பொருளாகும். அதற்கேற்ப இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் நல்ல வசதியாக வாழ்வார்கள். அனைவரையும் மதிப்பவர்கள், பக்திமான்களாக தெய்வ காரியங்கள் செய்வார்கள். கால்நடைச் செல்வங்கள் உடையவர்களாக இருப்பார்கள்.

4. செளபாக்யம் (செள):-
பெயரே செளபாக்யம் எனும் போது இவர்களின் சுக செளக்யம் நன்றாகவே இருக்கும். இதுவும் சுபமான யோகம் தான். இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடையவர்களாகவும், உறுதியான மனம் உடைய செயல்திறன் மிக்கவர்களாகவும், நல்ல பக்திமான்களாகவும், ஈவு இரக்கம் உடைய தர்மவான்களாக இருப்பார்கள். பெரியோர்களை மதிப்பவர்கள் என்பதுடன், சேவை செய்யும் மனப்பான்மையும் இருக்கும். உடல் உறவு சுகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். அழகை ரசிப்பவர்கள்.