சுப கத்கிரி யோகம்

சுப கத்திரி யோகம்

லக்னத்திற்கு இருபுறமும் அதாவது பன்னிரெண்டாம் வீடு அல்லது இரண்டாவது வீட்டில் சுப கிரகமான குரு, வளர் பிறை சந்திரன், சுபரோடு சேர்ந்த புதன், போன்ற கிரகங்கள் இருந்தால் அது சுப கத்திரி யோகம் எனப்படும். இது மிகுந்த செல்வாக்கை தரக்கூடிய அமைப்பாகும். இந்த யோகமானது வாழ்வில் சிறிதளவேனும் சிரமம் இல்லாமல் வாழ்கையை அனுபவிக்ககூடிய அமைப்பாகும். ஒரு சிலர் தமது கடுமையான உடல் உழைப்பால் சம்பாதித்து குடும்பத்தை நடத்துவர். ஆனால் சிலர் தனது புத்திசாலித்தனத்தால் உடல் உழைப்பு இல்லாமலே புத்தியால் தனத்தை இயற்றுவர். இதையே கிராமப்புறங்களில் " வாயிலேயே அபிஷேகம் செய்கிறான் " என்று கூறுவதுண்டு. இதையே புத்திமான் பலவான் என்றும் அழைப்பர் . சுப கத்திரி யோகம் பெற்றவர்கள் அடுத்தவருக்கு யோசனை சொல்வது மாதிரியான தொழில்களையே செய்வார்கள். கன்சல்டன்சி போன்ற வேலைகளிலேயே இவர்களால் நிலையாக இருக்க முடியும். மற்றபடி உழைப்பால் உடல் வருத்தும் தொழில்கள் இவர்களுக்கு அமையாது. படிப்பறிவு இல்லாவிட்டாலும் இவர்களுடைய திறமைகள் பல் துறைகளில் பளிச்சிடும்.