வர்கோத்தம யோகம்

வர்கோத்தம யோகம்
ஒருவர் ஜாதகத்தில் குறிப்பிட்ட ஒரு கிரகம் அவர்களது ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்தால் அதனை வர்கோத்தமம் அல்லது வர்கோத்தம யோகம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

உதாரணமாக ஒருவரது ஜனன (ராசி) ஜாதகத்தில், குரு கடகத்தில் அமர்ந்துள்ளார் என்றால், அவரது நவாம்சத்திலும் குரு கடகத்தில் அமர்ந்திருந்தால் வர்கோத்தமம் என்று கொள்ளலாம்.

ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி/உச்சம் பெற்ற கிரகங்களை விட வர்கோத்தமம் பெற்ற கிரகம் பல ராஜ யோகங்களைத் தர வல்லது. ஒருவருக்கு 2 அல்லது 3 கிரகங்கள் வர்கோத்தமம் பெற்றிருந்தால் அவருக்கு அதிக அளவிலான ராஜயோகம் கிடைக்கும்.

அதேவேளையில் எந்த கிரகம் வர்கோத்தமம் பெற்றுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். பாக்கியாதிபதி, ஜீவனாதிபதி, சுகாதிபதி ஆகிய கிரகங்கங்கள் வர்கோத்தமம் அடைந்தால் ஆயுள் முழுவதும் சிறப்பான பலன்களை அந்த ஜாதகர் அனுபவிப்பார்.

ஒரு சில பாவ கிரகங்கள் வர்கோத்தமம் பெற்றாலும் அவை சுபத்தன்மை அடைந்து, சிறப்பான பலன்களைத் தரும் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை.