"எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி."
காலத்தை அளக்கும் கருவியாகத் திகழ்பவனே!
ஸ்ரீமந் நாராயணரின் கண்ணாகத் திகழ்பவனே !
முக அழகுக்கு மாதிரியாக இருப்பவனே !
கல்லைக் கரைத்தால் போல் கல் மனத்தையும் கரைப்பவனே !
புதனுடன் இணைந்து ஒழுக்க நெறி குணத்தைத் தருபவனே !
சூரியனுடன் இணைந்து சிந்தனை வளம் பெருக்குபவனே !
ராம ராஜ்ஜியத்தை உருவாக்கியவனே !
காமம், குரோதம், மதம், மாச்சரியம் ஆகிய நான்கை அடக்குபவனே !
மனதில் சரியான சிந்தனையைத் தந்து, வெற்றிக்கு வழி தருபவனே !
விதியை மதியால் வெல்லலாம் !!!
"ஓம் சந்திர பகவானே போற்றி "